Apr 27, 2026
Thisaigal NewsYouTube
போதையில் எதிர் திசையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் சீனப்பிரஜை
தற்போதைய செய்திகள்

போதையில் எதிர் திசையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் சீனப்பிரஜை

Share:

சீனா நாட்டு நபர் ஒருவர் மதுபோதையில் காரை எதிர் திசையில் ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுங்கை பட்டாணி, பண்டார் லகுனா மெர்போக் பகுதியில் நேற்று இரவு சுமார் 500 மீட்டர் தூரம் சாலையின் எதிர் திசையில் காரை ஓட்டிச் சென்ற 50 வயது மதிக்கத்தக்க சீனா நாட்டுப் பிரஜை, எதிரே வந்த கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதில் அவருக்குச் சிறிய காயம் ஏற்பட்ட நிலையில், உள்ளூர் ஓட்டுநர் காயமின்றி தப்பினார். விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related News