Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது

Share:

ஜன.15-

ECRL எனப்படும் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் மாரான் முதல் கோத்தா பாரு வரையிலான முக்கிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் திட்டமிட்டதை விட இரண்டரை மாதங்கள் முன்னதாகவே முடிவடைந்துள்ளது. பருவமழை, கிளாந்தான் வெள்ளம் போன்ற தடைகள் இருந்தபோதிலும், இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. இதனால், கிளாந்தான் பகுதியில் தொலைத்தொடர்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார் Malaysia Rail Link Sdn Bhd இன் தலைமைச் செயல்முறை அதிகாரி Datuk Seri Darwis Abdul Razak .

ECRL திட்டத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றம் 77.39 விழுக்காட்டை எட்டியுள்ளது. கோத்தா பாருவிலிருந்து கோம்பாக் வரையிலான பாதை டிசம்பர் 2026 இல் முடிவடைந்து ஜனவரி 2027 இல் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Darwis குறிப்பிட்டார். சீனாவின் அதிநவீன தொழில்நுட்பமும் ECRL குழுவின் ஒத்துழைப்பும் இந்த விரைவான முன்னேற்றத்திற்கு காரணமாகும். சிலாங்கூரை நோக்கிய கட்டுமானப் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி