Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காரை வேகமாகச் செலுத்திய ஓட்டுனர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

காரை வேகமாகச் செலுத்திய ஓட்டுனர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.09-

அண்மையில் கெந்திங் ஹைலேண்ட்ஸ் சாலையில் அதிவேகமாகச் சென்று, விபத்துக்குள்ளான ஒரு காரின் பதைபதைக்க வைக்கும் காணொளியால் அதன் ஓட்டுநர் விசாரணைக்காகக் காவற்படையால் அழைக்கப்பட்டுள்ளார். வெறும் 29 வினாடிகள் வரை நீடிக்கும் அந்தத் தீயாகப் பரவியக் காணொளியில், ஒரு Proton S70 கார் கண்ணிமைக்கும் வேகத்தில் மற்ற வாகனங்களை முந்திச் சென்று, இறுதியில் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பை மோதிச் சுழல்வது பதிவாகியுள்ளது.

இந்த விபத்து கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12:30 மணியளவில் நடந்ததாகக் கூறிய பெந்தோங் மாவட்ட காவற்படைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஹாம் முகமட் காஹார், 24 வயதுடைய அந்த உள்ளூர் ஓட்டுநர் காயமின்றித் தப்பினார், ஆனால் வாகனம் மிக மோசமாகச் சேதமடைந்தது என்றார். அந்தச் சாலையைக் பந்தயத் தளமாக மாற்றும் அபாயகரமான ஓட்டுநர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று வலியுறுத்தி, காவற்படை இந்தச் சம்பவத்தை சாலைப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிகள் 1959, விதி 10 இன் கீழ் விசாரித்து வருகிறது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு