கோலா திரங்கானு, ஏப்ரல்.29-
கோலா திரங்கானுவில் 4 வயது வளர்ப்பு மகனைக் காயப்படுத்தி, மரணத்திற்குக் காரணமாக இருந்த 31 வயது லாரி உதவியாளர் ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் 18 ஆண்டுகள் சிறை, இரண்டு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Muhammad Firdaus Zamri என்ற, அந்த லாரி உதவியாளர், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி, Kampung Banggol Katong- கில் உள்ள ஒரு வீட்டில், Muhammad Adamdanial என்ற சிறுவனைத் தாக்கி மரணத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும், சிறுவனை பிரம்பால் தாக்கி காயப்படுத்தியதற்காகத் தனித்தனியாக 4 ஆண்டுகள் சிறை மற்றும் 2 பிரம்படிகள் விதிக்கப்பட்டன. எனினும், இந்த இரண்டு சிறைத் தண்டனைகளையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி Mohd Zul Zakiqudin Zulkifli உத்தரவிட்டார்.








