முன்மொழியப்பட்ட முற்போக்கான சம்பளக் கொள்கை, நல்ல முறையில் ஒருங்கிணைக்கவும், அதன் படிப்படியான அமலாக்கத்திற்கு தேவையான நிதி குறித்து ஆய்வு செய்யவும் அந்த பரிந்துரை அமைச்சரவைக்கு கொண்டு வரப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரவித்துள்ளார்.
நாட்டின் நிதி நிலை மற்றும் கொள்கைத் தேவைகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இன்று நடைபெற்ற என்.இ.எ.சி எனப்படும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழு கூட்டத்தில், சம்பள முறை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு, அதனை சம அளவில் விநியோகிக்கும் வகையில், வேலைப்புச் சந்தை மீட்சியை நோக்கிய ஒரு மாற்றம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கவும், தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றவும், மலேசியத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கவும் வேலைவாய்ப்புச் சந்தை சீர்திருத்தங்களில் ஒன்றாக இந்த சம்பளக் கொள்கை இருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


