Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரக் கம்பிகளைத் திருடியவர்கள் தேடப்படுகிறார்கள்
தற்போதைய செய்திகள்

மின்சாரக் கம்பிகளைத் திருடியவர்கள் தேடப்படுகிறார்கள்

Share:

பினாங்கு, ஆயேர் இத்தாம் பகுதியில் மின்சாரக் கம்பிகள் திருட்டு தொடர்பில் சந்தேகிக்கப்படும் சிலரை காவல் துறௌ தீவிரமாத் தேடி வருகிறது.

இது குறித்து தகவல் அளித்த திமூர் லாவுட் மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் சுப்ரிதென்டன் வி சரவணன் குறிப்பிடுகயில், பண்டார் பாரு காவல் நிலையத்தில் இத்திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட தொலைத் தொடர்பு நிறுவனத்தின் அதிகாரிகள் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்தார் .

நேற்று இரவு 8.30 மணி அளவிம் சோதனை நடவடிக்கையை அந்நிறுவனத்தினர் மேற்கொள்ளும்போது சில மின்சாரக் கம்பிகள் காணாமல் போயிருந்ததை அவர்கள் அப்புகாரில் கூறி இருந்தனர்.

இந்தத் திருட்டுச் சம்பவத்தால் அந்நிறுவனத்திற்கு 15 ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகையை உணர்ந்த அந்தத் திருட்டுப் பேர்வழிகள் வெட்டியெடுத்த சில கம்பிகளை சாலை ஓரத்திலேயே போட்டுவிட்டு வெள்ளை நிற புரோத்தோன் வீரா, மஞ்சள் நிற ஹோன்டா ஏக்கோட் என இரு வேறு கார்களில் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்த காணொலி ஒன்று வெளிவந்துள்ள நிலையில் பொது மக்கள் அதனைப் பகிர வேண்டாம் என சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!