Mar 21, 2026
Thisaigal NewsYouTube
ஊடுருவப்பட்ட டச் அண்ட் கோ அட்டையைப் பயன்படுத்திய தம்பதியர் கைது
தற்போதைய செய்திகள்

ஊடுருவப்பட்ட டச் அண்ட் கோ அட்டையைப் பயன்படுத்திய தம்பதியர் கைது

Share:

சிரம்பான், செப்டம்பர்.12-

ஊடுருவப்பட்ட டச் அண்ட் கோ அட்டையைப் பயன்படுத்தி, கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக டோல் கட்டணம் செலுத்தாமலேயே இலவசப் பயணம் மேற்கொண்டு வந்ததாக நம்பப்படும் ஒரு தம்பதியரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த ஆடவரும், சீன நாட்டுப் பிரஜையான அவரின் மனைவியும் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

சில டோல் சாவடிகளில் வசூல் பணம், டோல் சாவடியைக் கடந்த வாகனங்களின் எண்ணிக்கைக்கு நிகராக இல்லாதது குறித்து கண்டறியப்பட்டதை தொடர்ந்து இது குறித்து டச் அண்ட் கோ நிறுவனம் செய்து கொண்ட போலீஸ் புகாரின் அடிப்படையில் அந்தத் தம்பதியர் பிடிபட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் பயன்படுத்திய டச் அண்ட் கோ அட்டை அசலானதாகும். ஆனால் அந்த அட்டை ஒவ்வொன்றும் 150 ரிங்கில் முதல் 200 ரிங்கிட் வரை விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக ஒவ்வோர் அட்டையிலும் 300 ரிங்கிட் மதிப்பில் ஊடுருவல் நடந்துள்ளதாக அல்ஸஃப்னி அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து