மாஜ்லிஸ் அமானா ரக்யாட் எனப்படும் மாரா கல்வி நிறுவனத்தில் குறைந்தது 8 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அதன் தலைவர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி வெளியிட்டுள்ள தகவலில், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை தடையின்றி நடைபெறுவதற்காக ஊழியர் உடனடி இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவர்கள் சிலர், தமக்கு நேரடியாக குறுஞ்செய்திகள் அனுப்பியதன் மூலம் இந்த விவகாரம் தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, மாரா நிர்வாகத்துக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், இது குற்றவியல் விவகாரம் என்பதால், போலீசில் புகார் அளிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தியதாகவும் அவர் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.








