மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், நாட்டில் புதிய எரிபொருள் விலை மாற்றங்களை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை முதல் RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் குறைக்கப்பட்டு 4.95 ரிங்கிட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 50 சென் அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு 6.02 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.87 ரிங்கிட்டில் மாற்றமின்றி நீடிக்கிறது.
இருப்பினும், BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படுபவர்களுக்கு RON95 பெட்ரோல் விலை 1.99 ரிங்கிட்டாகவும், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை 2.15 ரிங்கிட்டாகவும் மாற்றமின்றி தொடர்கிறது. இந்த புதிய விலைகள் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.








