Mar 14, 2026
Thisaigal NewsYouTube
புதிய மழலையர் பள்ளிப் பாடத் திட்டம்: 6 பிரதான அம்சங்களில் தீவிர கவனம்
தற்போதைய செய்திகள்

புதிய மழலையர் பள்ளிப் பாடத் திட்டம்: 6 பிரதான அம்சங்களில் தீவிர கவனம்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.05-

2026 பள்ளி புதிய கல்வியாண்டு இந்த ஜனவரியில் தொடங்கப்படுவதை முன்னிட்டு புதிய மழலையர் பள்ளிப் பாடத் திட்டம், 6 பிரதான அம்சங்களைக் கொண்டு இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் இன்று அறிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 2027-ஆம் ஆண்டில் தொடங்கப்படாமல், ஓர் ஆண்டுக்கு முன்னதாகவே அதாவது 2026-லேயே புதிய மழலையர் பள்ளி பாடத் திட்டம் அமல்படுத்தப்படவிருக்கிறது. இது குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான 6 பிரதான துறைகளில் கவனம் செலுத்தும் என்று ஃபாட்லீனா சீடேக் குறிப்பிட்டார்.

சமூக - உணர்ச்சி வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட நல்வாழ்வு, மொழி மற்றும் எழுத்தறிவு, ஆன்மீகம் மற்றும் குடியுரிமை, படைப்பாற்றல் மற்றும் அழகியல், அறிவுசார் வளர்ச்சி ஆகியவையே அந்த 6 துறைகளாகும் என்று அமைச்சர் விளக்கினார்.

2026-ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சின் இரண்டாவது முன்னுரிமையாக, நாட்டின் புதிய கல்வி மேம்பாட்டுத் திட்டம், இந்த ஜனவரி மாதத்திலேயே அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படவிருப்பதையும் ஃபாட்லீனா சீடேக் சுட்டிக் காட்டினார்.

இது நீண்ட காலக் கல்விச் சீர்திருத்தங்களை உள்ளடக்கியதாக அமையும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்