தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமைச்சரவை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் பிரதமர் கோடி காட்டினார்.
தமது பத்து மாத கால ஆட்சியில் அமைச்சரவையில் மிகப்பெரிய சீரமைப்பை செய்வதற்கு பிரதமர் அன்வார் திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் ஆருடம் கூறி வருகின்றன.
குறிப்பாக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலாங்கை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையமான MITEC கில் 2023 ஆம் ஆண்டுக்கான தகவல், தொழில்நுட்ப, தொடர்புத்துறைக்கான உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


