தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமைச்சரவை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் பிரதமர் கோடி காட்டினார்.
தமது பத்து மாத கால ஆட்சியில் அமைச்சரவையில் மிகப்பெரிய சீரமைப்பை செய்வதற்கு பிரதமர் அன்வார் திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் ஆருடம் கூறி வருகின்றன.
குறிப்பாக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலாங்கை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையமான MITEC கில் 2023 ஆம் ஆண்டுக்கான தகவல், தொழில்நுட்ப, தொடர்புத்துறைக்கான உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு


