தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமைச்சரவை மாற்றத்திற்கான சாத்தியம் இருப்பதையும் அவர் பிரதமர் கோடி காட்டினார்.
தமது பத்து மாத கால ஆட்சியில் அமைச்சரவையில் மிகப்பெரிய சீரமைப்பை செய்வதற்கு பிரதமர் அன்வார் திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் ஆருடம் கூறி வருகின்றன.
குறிப்பாக, வரும் அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பகாங், பெலாங்கை சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு மிகப்பெரியளவில் அமைச்சரவை மாற்றம் நடைபெறலாம் என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இந்நிலையில் இன்று கோலாலம்பூரில் மலேசிய அனைத்துலக வர்த்தக கண்காட்சி மையமான MITEC கில் 2023 ஆம் ஆண்டுக்கான தகவல், தொழில்நுட்ப, தொடர்புத்துறைக்கான உச்சநிலை மாநாட்டை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தப் பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


