Mar 11, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேர இடைவிடாத திரையீடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது ஜெயீலர்
தற்போதைய செய்திகள்

24 மணி நேர இடைவிடாத திரையீடு மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது ஜெயீலர்

Share:

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் மலேசிய முழுவதிலும் திரையீடு கண்டுவரும் ரஜினி நடித்த ஜெயீலர் திரைப்பட வெளியீட்டை ஒட்டி, 24 மணி நேரம் இடைவிடாது ஜெயீலர் திரைப்படத்தை திரையீட்டு Five Star Trading மற்றும் LFS Cinema மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று வரலாறு படைத்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் Five Star Trading மற்றும் LFS Cinema, பி.ஜே ஸ்தேட் திரையரங்கில் 26 மணி நேரம் 59 நிமிடங்களில் ஜெயீலர் திரைப்படத்தை மிக நீண்ட நேரம் இடைவிடாமல் திரையிடப்பட்டதின் மூலம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் முத்திரைப்பதித்துள்ளது.

மலேசிய திரையுலக வரலாற்றில் தமிழ்ப்படம் ஒன்று இடைவிடாமல், திரையிடப்பட்டு சாதனைப் படைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேற்கண்ட நேரத்தில் இந்த இடைவிடாத திரையீட்டின் வழி 600 டிக்கேட்டுகள் விற்பனையாகியுள்ளன.

இந்நிகழ்வில் ரஜினி ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் போப்கோன் சாப்பிடும் போட்டி, ரஜினி நடித்த திரைப்படத்தில் 30 வினாடிகளில் கதைக்கூறும் போட்டி நடத்தப்பட்டதுடன் வெற்றியாளர்களுக்கு திரைப்பட வவுச்சர்கள் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ஜெயீலரின் இடைவிடாத திரையீட்டின் மூலம் சாதனைப்படைத்ததிற்காக நிகழ்வில் கலந்து கொண்ட மலேசிய சாதனை புத்தகத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி குமாரி லீ, Five Star Trading- யின் தலைமை நிர்வாகி டாக்டர் சாய் சுதனுக்கு மலேசிய சாதனை புத்தகத்திற்கான நற்சான்றிதழை வழங்கி சிறப்பு செய்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு