May 26, 2026
Thisaigal NewsYouTube
உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்
தற்போதைய செய்திகள்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

Share:

தஞ்சோங் மாலிம், உப்சி பல்கலைக்கழகத்தில் பயிலும் B40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவும் பொருட்டு முதல் கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

இது பேரா மாநில அரசாங்க நிதியாக இருந்த போதிலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பேரா மாநிலம் மட்டுமின்றி இதர மாநிலங்களை சேர்ந்த இந்திய மாணவர்களும் பயில்வதால் அனைவரும் பயன்பெறும் வகையில் அந்த 25 ஆயிரம் ரிங்கிட் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டு, அதனை பராமரிக்கும் பொறுப்பு, அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் காத்திகேசனிடம் ஒப்படைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈப்போ, கல்லுமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தான மண்டபத்தில் பேரா மாநில இந்து சங்கத்தின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சிவநேசன் இதனை தெரிவித்தார்,

இந்திய மாணவர்களுக்கான நீண்ட கால அடிப்படையிலான நிதி உதவிக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு நிதியை ஒதுக்குவது குறித்து பரிந்துரைக்கப்படும் என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

Related News

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு