May 26, 2026
Thisaigal NewsYouTube
காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை
தற்போதைய செய்திகள்

காஜாங்கில் போலீசாருடன் துப்பாக்கிச் சண்டை: 30 குற்றப்பின்னணி கொண்ட 2 கொள்ளையர்கள் சுட்டுக்கொலை

Share:

சிலாங்கூர், காஜாங் அருகே நேற்று இரவு போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் உள்ளூரைச் சேர்ந்த இரு கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குநர் டத்தோ எம். குமார் முத்துவேலு தெரிவித்தார்.

நேற்று இரவு 9:10 மணியளவில், புக்கிட் அமான் 'டி9' பிரிவினர் தீவிரக் குற்றத் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாங்கி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய புரோட்டான் வீரா காரை நிறுத்த முற்பட்டனர். ஆனால், காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்ற சந்தேக நபர்கள், போலீஸ் வாகனத்தின் மீது மோதிவிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தற்காப்பிற்காக போலீசார் திருப்பி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காரில் இருந்த 25 மற்றும் 46 வயதுடைய இரு கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், .38 ரக ரிவோல்வர் துப்பாக்கி ஒன்று, 6 தோட்டாக்கள், 4 வீச்சரிவாள்கள், பூட்டுடைக்கும் கருவிகள் மற்றும் மாற்று வாகன எண்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று இன்று காஜாங் போலீஸ் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனை தெரிவித்தார்.

கொல்லப்பட்ட இருவரும் ஆயுதமேந்திய கொள்ளை, வீடுபுகுந்து திருடுதல் உட்பட சுமார் 30 முந்தைய குற்றப்பின்னணிகளைக் கொண்ட தீவிரக் கொள்ளையர்கள் ஆவர். இவர்கள் நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள வீடுகளைக் குறிவைத்து, முகமூடி அணிந்து, ஆக்ரோஷமாக கொள்ளையடிப்பதையே தங்களின் பாணியாகக் கொண்டிருந்தனர். இன்னும் தலைமறைவாக உள்ள இக்கும்பலைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று டத்தோ குமார் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் டி.என்.ஏ.ஏ மேல்முறையீட்டு அனுமதியை எதிர்த்து சாஹிட் கூட்டரசு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு