கூலிம், தாமான் கெனாரி பகுதியில் சுமார் 6.3 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளைக் கடத்தியதாக 35 வயது திட்ட மேலாளர் ஒருவர் இன்று கூலிம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
சுவேந்திரன் செல்வராஜ் என்ற அந்த திட்ட மேலாளர் மாஜிஸ்திரேட் நூர் ஹமிசா மாட் ஷா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த மே 22-ஆம் தேதி நள்ளிரவு 12.10 மணியளவில் தாமான் கெனாரியில் சுவேந்திரன் போதைப்பொருளை கடத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் சுவேந்திரன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
பல்வேறு குற்றப் பின்னணி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட சுவேந்தரனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இவ்வழக்கு விசாரணை வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.








