May 26, 2026
Thisaigal NewsYouTube
பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்திகள்

பெண் கழுத்தில் குத்தப்பட்ட வழக்கு: 32 வயது நிலமுகரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

Share:

அலோர் ஸ்டாரில் தனித்து வாழும் தாய் ஒருவரைக் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இல்ஹாம்னி பாதருதீன் என்ற 32 வயதான நிலமுகவரை மனநல பரிசோதனைக்கு அனுப்ப அலோர் ஸ்டார் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி என். பிரிசில்லா ஹேமமாலினி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட அந்நபர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 307(1)-ன் கீழ் கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

எனினும், அந்நபர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

இதனிடையே, அவரது வழக்கறிஞரான ஹக்கீம் ஹம்ரான் முன்வைத்த மனுவை ஏற்ற நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்டவரை மனநல மதிப்பீட்டிற்காக பேராக் மாநிலம் தஞ்சுங் ரம்புத்தானில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையில் மனநல பரிசோதனைக்கு அனுப்ப அனுமதி வழங்கினார்.

கடந்த மே 17 -ஆம் தேதி, இரவு 9.19 மணியளவில், அலோர் ஸ்டார் தித்தி காஜா பகுதியில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில், இல்ஹாம்னி பாதருதீன் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட்  வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

உப்சி பல்கலைக்கழகத்திற்கு முதற்கட்ட நிதியாக 25 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படும்: டத்தோ சிவநேசன் தகவல்

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

மலையேற்றத்தின் போது மாயமான 19 வயதுப் பெண் சடலமாக மீட்பு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

6.3 கிலோ போதைப்பொருள் கடத்தல்: திட்ட மேலாளர் மீது குற்றச்சாட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

மலேசியா - இந்தியா உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திய இந்திய தூதர்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் நெஞ்சார்ந்த பாராட்டு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

ஜூன் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த புதிய மலேசியக் கடப்பிதழ் ஒத்திவைக்கப்பட்டது / குடிநுழைவுத் துறை அறிவிப்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்