Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கடல்வாழ் உயிரினங்களின் விலை அதிகரிக்காது
தற்போதைய செய்திகள்

கடல்வாழ் உயிரினங்களின் விலை அதிகரிக்காது

Share:

ஒவ்வொரு ஆண்டு சீனப்புத்தாண்டின் பொழுது அபலோன் எனப்படும் கடலோர பகுதியில் வாழும் ஒரு காஸ்ட்ரோபாட் மொல்லக்ஸ் - யின் விலை அதிகமாக இருப்பதுடன் கடல் வெள்ளரி மற்றும் மீன் மாவ் விலைகளும் உயர்ந்தே காணப்படும்.

முந்தைய ஆண்டினை காட்டிலும் இந்த மூன்று கடல்வாழ் உயிரினங்களின் விலை இவ்வாண்டு சற்று குறைந்தே காணப்படும் என்று தெரியவந்துள்ளது.

சீனா அதிக அளவிலான அபலோன் உற்பத்தியை கொண்டிருப்பதனால் அதனை குறைந்த விலையிலேயே சந்தையில் விற்க ஏற்பாடு செய்திருப்பதாக விற்பனையாளரான டத்தோ சான் லிம் குவான் கூறினார்.

இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் மாவ், உள்நாட்டிலேயே அறுவடை செய்யப்படும் கடல் வெள்ளரிகள் போதுமான அளவிலேயே வழங்கப்படுவதாக சான் லிம் பதிவிட்டார்.

கோவிட் 19 நோய்தொற்றினால் சில வியாபாரிகளின் பொருளாதாரம் இன்னமும் பாதிப்படைந்திருந்தாலும் இவ்வாண்டு வணிகம் சிறப்பாக அமையும் என்று நம்புவதாக சான் லிம் தெரிவித்தார்.

Related News

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிப்பாங் கொள்ளைச் சம்பவம்: 4 கொள்ளையர்களைப் பிடிக்கும் சாதகமான ஆதாரம் சிக்கியது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

சிகு சந்திராவுக்கு எதிரான அச்சுறுத்தல்: பெண் உட்பட 12 பேர் கைது

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

துவாரன் பகுதியில் 700 வாகனங்கள் தீயில் கருகி நாசம்

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

சமூக ஊடகங்கள் மூலம் பொய்யான செய்திகளைப் பரப்பாதீர்கள் - பேராக் மந்திரி பெசார் வலியுறுத்து

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்