எதிர்வரும் மாநில சட்டமன்ற கூட்டத்தில் பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்சா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அம்மாநில பாஸ் கட்சி மறுத்துள்ளது.
மாநில சட்டமன்ற கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாநில ஆட்சி அதிகாரத்தை மாற்றும் நோக்கம் இருந்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையில்லை என்றும், கட்சிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதாகவும் அக்கட்சியின் துணை ஆணையர் ஷாஹிதான் காசிம் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் சில தரப்பினரால் பரப்பப்படும் ஊகமே என்று குறிப்பிட்டுள்ள ஷாஹிதான், அபு பக்கார் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான எந்த ஒரு எண்ணமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.








