வரும் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரையில், உழைப்பாளர் தினக் கொண்டாட்டம் மற்றும் நீர் இசை விழா நடைபெறுவதையொட்டி, ஜாலான் புக்கிட் பிந்தாங் சாலையானது வாகனங்களுக்கு மூடப்படும் என்று மலேசிய சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
மலேசிய வருகை 2026 முயற்சியின் ஒரு பகுதியாக, புக்கிட் பிந்தாங் பகுதியில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மேலும், ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் படிப்படியாக புக்கிட் பிந்தாங்-ஐச் சுற்றியுள்ள சாலைகளும் மூடப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஜாலான் புக்கிட் பிந்தாங் பகுதியில், வரும் ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை, வாரநாட்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகுதி சாலை மூடல் அமலில் இருக்கும்.
வார இறுதி நாட்களில், அதே சாலைகள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 7 மணி வரையில், முழுமையாக மூடப்படும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.








