May 17, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

சுற்றுலா நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை.28-

சுற்றுலாத் துறைகளுக்கான லைசென்ஸ் உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலா, கலை, கலாச்சாரத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ கியோங் கிங் சிங் எச்சரித்துள்ளார்.

சபா மாநிலத்தில் செம்புர்னாவில் முக்குளிப்பு பயிற்றுநருக்கும், சுற்றுப் பயணிகளுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பைச் சித்தரிக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது தொடர்பில் கருத்துரைத்த போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.

பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வு, முக்குளிப்பு நடவடிக்கையின் போது நிகழ்ந்ததாகக் கூறப்படுவதாக அமைச்சர் தியோங் தனது முக நூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சுற்றுப் பயணி ஒருவர் படகில் தவறான இடத்தில் வைத்த ஆக்சஜன் சிலிண்டர் தவறி விழுந்து முக்குளிப்பு பயிற்றுநரின் காலில் விழுந்து காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பில் முடிந்துள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இவ்விவகாரத்தை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதில் விதி மீறல்கள் நிகழ்ந்து இருக்குமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.

அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை உறுதிச் செய்ய சுற்றுப் பயணிகள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் பயிற்றுநர்கள் மத்தியில் ஒத்துழைப்பு நிலவுவது அவசியம் என்று அமைச்சர் தியோங் வலியுறுத்தினார்.

Related News

மலிவு வீடமைப்பே மலேசிய அரசின் முக்கிய முன்னுரிமை - அமைச்சர் ஙா கோர் மிங்

மலிவு வீடமைப்பே மலேசிய அரசின் முக்கிய முன்னுரிமை - அமைச்சர் ஙா கோர் மிங்

பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி

பேங்க் நெகாராவின் SME SRF திட்டம்: PMKS நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி கடனுதவி

T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

T20 புதிய வரையறை குறித்து அமைச்சரவையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை - அமைச்சர் அமீர் ஹம்சா தகவல்

திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது

திரங்கானுவில் ஆயுதங்கள், போதைப் பொருட்களுடன் அரசாங்க ஊழியர் கைது

பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்

பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்

100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு

100 மில்லியன் ரிங்கிட் நிதியொதுக்கீட்டில் ‘PACE’ திட்டம் அறிமுகம் - மனிதவள அமைச்சர் ரமணன் அறிவிப்பு