கூலாய், பிப்ரவரி.18-
கூலாய் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் கிலோமீட்டர் 37.4- இல் மோட்டார் சைக்கிள் ஒன்று சாலை தடுப்பு சுவரில் மோதியதில், கணவன் – மனைவி உயிரிழந்தனர்.
நேற்று மதியம் 1.40 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, 55 வயதான ஆடவரும், அவரது 49 வயதான மனைவியும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் உதவி ஆணையர் டான் செங் லீ தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திக் கொண்டிருந்த அந்த ஆடவர், திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதியதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர்கள் இருவரும் மரணமடைந்துள்ளனர்.
இச்சம்பவமானது 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 41(1)-ன் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.








