Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கைதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்குப் பரிந்துரை
தற்போதைய செய்திகள்

கைதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்குப் பரிந்துரை

Share:

சிறையில் உள்ள 70,000 க்கும் மேற்பட்ட கைதிகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் அளவிற்கு உழைக்கக்கூடிய நிலையில் உள்ளனர் என்று மனித வள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை இலாகாவின் வியூக ஒத்துழைப்புடன் பெர்கெசோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் வாயிலாக கைதிகளுக்கான வேலை வாய்ப்புத்திட்டத்தை மனிவள அமைச்சு அமல்படுத்த இயலும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக சிறை வாழ்வில் தங்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்திக்கொண்டுள்ள கைதிகள் குறிப்பாக இளையோர்கள் இத்தகைய வேலை வாய்ப்புத் திட்டத்தின் வாயிலாக திருந்திய மனிதர்களாக பலன் பெறும் அதேவேளையில், தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள தொழில்துறைகளும் ஆள்பலத்தைச் சரிசெய்து கொள்ள இயலும் என்று சிவகுமார் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் விஸ்மா பெர்கெசோ தலைமையகத்தில் சிறைச்சாலை இலாகாவுடன் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் பெர்கெசோ செய்து கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்விற்குத் தலைமையேற்றப் பின்னர் மனித வள அமைச்சர் இதனை அறிவித்தார்.

சிறைச்சாலை இலாகா இவ்வாண்டில் 15 ஆயிரம் கைதிகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் இலக்கு கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்