Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் உயிரிழப்பு, அந்த போ​லீஸ் அதிகாரி கைது
தற்போதைய செய்திகள்

மாணவன் உயிரிழப்பு, அந்த போ​லீஸ் அதிகாரி கைது

Share:

ஈப்போவில் பள்ளி மாணவனை காரில் மோதி தள்ளி, உயிர் இழப்புக்கு காரணமான போ​லீஸ் அதிகாரி கைது செய்யப்ப்டடார். 17 வயது மாணவனை மோதி தள்ளியப் பின்னர் அங்கிருந்து காரில் தப்பிய கெடா போ​லீஸ் தலைமையகத்தை சேர்ந்த அந்த போ​லீஸ் அதிகாரி, தாமான் ஜத்தி யில் மேற்கொள்ளப்பட்ட போ​லீஸ் சாலைத்தடுப்பு சோதனையில் சிக்கினார் என்று ஈப்போ மாவட்ட போ​லீஸ் தலைவர் யஹாயா ஹாசன் தெரிவித்தார்.

இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் அமர்ந்துள்ள சஹரிஃப் அஃப்ஃபென்டி சம்ரி என்ற அந்த மாணவன், நேற்று மதியம் பள்ளி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த போது, புரோடுவா அதிவா காரில் பயணித்த போ​லீஸ் அதிகாரி, அந்த மாணவனின் மோட்டார் சைக்கிளையை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.

44 வயதுடைய அந்த போ​லீஸ்காரர் அவ்விடத்திலிருந்து தப்பிவிட்டதைத் தொடர்ந்து அவரை தேடும் பணியில் போ​லீசார் ஈடுபட்டனர். நெஞ்சிலும், வயிற்றிலும் கடும் காயங்களுக்கு ஆளான அந்த மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டான்.

குற்றம் இழைத்தவர்கள் போ​லீஸ் படையைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் யாரையும் தாங்கள் தற்காக்கப் போவதில்லை என்று யஹாயா ஹாசன் உறுதி கூறினார்.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்