Mar 30, 2026
Thisaigal NewsYouTube
போலியான கோரிக்கை, முன்னாள் நிர்வாகி கைது
தற்போதைய செய்திகள்

போலியான கோரிக்கை, முன்னாள் நிர்வாகி கைது

Share:

புத்ராஜெயா, நவ. 13-


அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றின் பொறியியல் பிரிவு முன்னாள் மூத்த நிர்வாகி ஒருவர், 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போலி கோரிக்கையை முன்வைத்து, மோசடி செய்தது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த முன்னள் நிர்வாகி, நேற்று எஸ்.பி.ஆர்.எம். தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஏதுவாக அவர் இன்று காலையில் புத்ராஜெயா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, அவரை தடுத்து வைப்பதற்கான அனுமதியை எஸ்.பி.ஆர்.எம். பெற்றுள்ளது.

Related News