மலாயன் ரயில்வே பெர்ஹாட்டான எனப்படும் KTMB தனது தென் பிராந்தியத்திற்கான ரயில் சேவையை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான வழித்தடத்திற்கு விரிவுபடுத்துகின்றது.
இந்த புதிய சேவையானது, பாலோ, களுவாங் ,ரெங்கம், லயாங்-லயாங், குலாய், கெம்பாஸ் பாரு மற்றும் ஜே பி சென்ட்ரல் ஆகிய 7 நிலையங்களை இணைக்கவுள்ளது.
தினமும் இரு திசைகளிலும் தலா 5 சேவைகள் என மொத்தம் 10 ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ளன.
பாலோ – ஜே பி சென்ட்ரல் இடையிலான பயண நேரம் சுமார் 120 நிமிடங்கள் ஆகும்.
இந்த புதிய மின்சார ரயில்கள் அறிமுகமாகும் வரை, பாலோ – ஜே பி சென்ட்ரல் ஒரு வழிக் கட்டணம் 15 ரிங்கிட் 30 காசிலிருந்து, 7 ரிங்கிட் 70 காசுகளாக சலுகை விலையில் வழங்கப்படும்.
மேலும், மைரயில் லைஃப் பாஸ் திட்டத்தின் கீழ் 4 முதல் 6 வயது குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் டிசம்பர் 31 வரை இலவசமாக பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவை விரிவாக்கமானது, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலமமான JS-SEZ வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், தொழிலாளர்களின் பயண வசதியை மேம்படுத்தி தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்க உதவும் என KTMB தெரிவித்துள்ளது.








