ஜோகூர் பாரு, ஏப்ரல்.26-
ஜோகூர் பாருவிக் நிகழ்ந்த சாலை விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்தார். அவரின் நண்பர் படுகாயத்திற்கு ஆளாகினார். இச்சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஜோகூர் பாரு, ஜாலான் சுங்கை திராம் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த எம்பிவி வாகனத்துடன் மோதியதாக நம்பப்படுகிறது. இதில் 15 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஶ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் சொஹைமி இஷாக் தெரிவித்தார்.








