Feb 12, 2026
Thisaigal NewsYouTube
 "சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி
தற்போதைய செய்திகள்

"சிறப்பாக கடமையாற்றி வரும் அஸாம் பாக்கியை எதற்காக பதவி நீக்கம் செய்ய வேண்டும்?" - அன்வார் கேள்வி

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார்.

அவர் தனது கடமையை சிறப்பாக செய்து வரும் நிலையில், அவரை எதற்காகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அன்வார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிதிச் சேவை நிறுவனமான Velocity Capital Bhd-இல் அவருக்கு 17.7 மில்லியன் பங்குகள் இருப்பதாக வெளியான புளூம்பெர்க் செய்தியையடுத்து, ரஃபிஸி ரம்லி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அஸாம் பாக்கியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அஸாம் பாக்கி வெளியிட்டுள்ள அறிக்கையை அனைத்துத் தரப்பினரும் முறையாக வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

அஸாம் பாக்கிக்கு எதிரான அது போன்ற விமர்சனங்கள் ஆரோக்கியமானது அல்ல என்றும் அன்வார் சாடியுள்ளார்.

இதனிடையே, சந்தையில் தற்போது தனக்கு எந்தப் பங்குகளும் இல்லை என்றும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதியே இது குறித்து புளூம்பெர்க்கிற்கு விளக்கம் அளித்து விட்டதாகவும் அஸாம் பாக்கி விளக்கமளித்துள்ளார்.

எஸ்பிஆர்எம் அமைப்பின் நற்பெயரைக் கெடுத்ததற்காக நாளை அந்த நிறுவனத்திற்குச் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்படும் என்று அஸாம் பாக்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்

தெலுக் ஜாவா ஓராங் அஸ்லி கிராமத்தில் தீ விபத்து - 30 வீடுகள் சேதம்

கோலாலம்பூரில் மாயமான சிங்கப்பூர் பிரஜை - பொதுமக்களின் உதவியை நாடுகிறது மலேசிய போலீஸ்

கோலாலம்பூரில் மாயமான சிங்கப்பூர் பிரஜை - பொதுமக்களின் உதவியை நாடுகிறது மலேசிய போலீஸ்

கடந்த ஆண்டு அரசாங்கப் பள்ளிகளில் 5,038 பகடிவதை சம்பவங்கள் பதிவு - கல்வி அமைச்சு தகவல்

கடந்த ஆண்டு அரசாங்கப் பள்ளிகளில் 5,038 பகடிவதை சம்பவங்கள் பதிவு - கல்வி அமைச்சு தகவல்

ரவாங்கில் இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய 4 பேர் கைது: வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி

ரவாங்கில் இந்து ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்திய 4 பேர் கைது: வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி

மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்

மாதம் 250 வெள்ளியில் சொந்த வீடு: பினாங்கு மக்களின் கனவை நனவாக்கும் புதிய வீட்டுத் திட்டம்

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து

பாரம்பரிய ஆலயங்களின் விவகாரத்தை மனிதாபிமானத்துடனும், வரலாற்றுப் பின்னணியுடனும் கையாள வேண்டும் - பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்து