Apr 17, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டம்: தடையின்றி இயங்கும் சேவை மையங்கள் - பொதுமக்கள் நிம்மதி
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டம்: தடையின்றி இயங்கும் சேவை மையங்கள் - பொதுமக்கள் நிம்மதி

Share:

நாட்டில் சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' செய்யும் முறை இன்று நடைமுறைக்கு வந்தது. இருப்பினும், கோலாலம்பூரில் உள்ள செந்துல், கிராமாட் மற்றும் புடு ஆகிய பகுதிகளில் உள்ள நகர்ப்புற உருமாற்ற மையங்களான UTC அரசுச் சேவைகள் எவ்விதத் தொய்வுமின்றி வழக்கம் போல் செயல்பட்டன.

• குடிநுழைவுத்துறை , தேசியப் பதிவுத் துறையான JPN மற்றும் சாலைப் போக்குவரத்து இலாகாவான JPJ போன்ற பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் 'முன்வரிசை' சேவைகளுக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் திட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் கடப்பிதழ் விண்ணப்பம் போன்ற பணிகளுக்காக UTC வந்திருந்த பொதுமக்கள், 5 முதல் 10 நிமிடங்களிலேயே தங்கள் வேலைகள் முடிந்ததாகத் தெரிவித்தனர்.

• அத்தியாவசியச் சேவைகள் எக்காரணம் கொண்டும் தடைபடக்கூடாது எனத் அரசு இலாகாக்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Related News