Jul 4, 2026
Thisaigal NewsYouTube
பிணைப் பணம் கோரி வர்த்தகரைக் கடத்தியதாக 7 அந்நியர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பிணைப் பணம் கோரி வர்த்தகரைக் கடத்தியதாக 7 அந்நியர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஜூலை.30-

வங்காளதேசப் பிரஜையான 47 வர்த்தகர் ஒருவரைக் கடத்திச் சென்று பிணைப் பணம் கோரியதாக 7 அந்நிய நாட்டவர்கள், கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

23 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்நிய நாட்டவர்கள், கடந்த ஜுன் 26 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கோலாலம்பூர், செந்தூலில் உள்ள ஒரு பள்ளிவாசல் முன்புறம் அந்த வங்காளதேச வர்த்தகரைக் கடத்திச் சென்று பிணைப் பணம் கோரியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு, உயர் நீதிமன்ற விசாரணைக்குரியது என்பதால் அந்த எழுவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த எழுவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது