Apr 27, 2026
Thisaigal NewsYouTube
அரிசோனா: பாலைவனத்தில் 5 நாட்கள் போராட்டம் - சிறுநீர் குடித்து உயிர் பிழைத்த முதியவர்
தற்போதைய செய்திகள்

அரிசோனா: பாலைவனத்தில் 5 நாட்கள் போராட்டம் - சிறுநீர் குடித்து உயிர் பிழைத்த முதியவர்

Share:

அமெரிக்காவின் அரிசோனா பாலைவனத்தில் வழிதவறி 5 நாட்கள் மாயமான 76 வயது முதியவர், தனது சிறுநீரையே குடித்து உயிர் பிழைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வியட்நாம் போர் வீரரான மார்க் எரிக் யங், பாலைவனப் பகுதியில் கார் ஓட்டிச் சென்றபோது வழிதவறி மாயமானார். கடும் வெப்பம் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால், உயிர் பிழைக்க வேறு வழியின்றி தனது சிறுநீரையே குடித்து நாட்களைக் கடத்தியுள்ளார்.

மேலும், விஷப்பாம்புத் தாக்குதலிலிருந்தும் தப்பிய அவர், 5 நாட்களுக்குப் பிறகு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், அவரது மன உறுதி பலரையும் வியக்க ஏற்படுத்தியுள்ளது.

Related News