புத்ராஜெயா,ஆகஸ்ட் 04-
South Port -டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்தில் நடந்து வரும் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் அங்குள்ள மலேசியர்கள் அல்லது அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டவர்கள், ஒதுங்கியிருக்குமாறு Wisma Putera அறிவுறுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் டஜன் கணக்கில் ஆரப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். லண்டனில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக அங்குள்ள நிலவரத்தை வெளியுறவு அமைச்சு அணுக்கமாக கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது .








