Aug 7, 2026
Thisaigal NewsYouTube
கெடா மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்
தற்போதைய செய்திகள்

கெடா மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்

Share:

வரும் சனிக்கிழமை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுமானால் மாநிலத்தில் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ செரி சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எந்தவொரு மாநில அரசாங்கமும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல் பட்டால் மட்டுமே தனது மாநிலத்தில் நிலவி வரும் பல பிரச்னைகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காண முடியும்.

அந்த வகையில் கெடா மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் – பாரிசான் நேஷனல் கூட்டணி கைப்பற்றுவது மூலம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஆட்சிபுரிந்து வரும் ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து கெடா மாநிலத்தினால் நிறைவான ஆட்சியை வழங்க முடியும் என்ற பிகேஆர் கட்சியின் பொதுச் செயலாளருமான சைபுடின் குறிப்பிட்டார்.

கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பிகேஅர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும்
அவாங் தெங் லியாங் ஒங்குடன் நேற்று கூலிம் சுங்கை உலார் தோட்டத்திற்கு வருகை புரிந்த போது சைபுடின் இதனை தெரிவித்தார். சுங்கை உலார் தோட்டத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுடனான இந்த சந்திப்பு நிகழ்வில், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அவாங் தெங் லியாங் ஒங் கை ஆதரிக்க வேண்டிய அவசியத்தையும் சைபுடின் தெளிவுபடுத்தினார். அவாங் தெங் லியாங் ஒங்வெற்றி பெற்றால், கூலிம் தொகுதி, மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறைய உதவிகளை பெற முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!

முன்னாள் தலைமை நீதிபதி முகமது யூசோஃப் சின் காலமானார்: இன்று இறுதிச் சடங்கு நடைபெறுகிறது!