Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாவலர் சந்திரன் மரணம்: சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீஸ் காத்திருக்கிறது
தற்போதைய செய்திகள்

பாதுகாவலர் சந்திரன் மரணம்: சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீஸ் காத்திருக்கிறது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.14-

கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள ஓர் அடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியின் பாதுகாவலர் சந்திரன், அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த ஆடவர் ஒருவரினால் தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் அந்த பாதுகாவலரின் சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் போலீசார் காத்திருப்பதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுகார்னோ முகமட் ஸஹாரி தெரிவித்தார்.

பாதுகாவலர் சந்திரன் மரணம் தொடர்பில் விசாரணை அறிக்கை மேல் நடவடிக்கைக்காக துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரால் தாக்கப்பட்ட பாதுகாவலர் சந்திரன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற சில மணி நேரத்தில் மாரடைப்பினால் காலமானார்.

முதலில் குற்றவியல் சட்டம் 324 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்ட 32 வயது நபர், பின்னர் சந்திரனின் மரணத்தைத் தொடர்ந்து குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஏசிபி சுகார்னோ தெரிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

பாதுகாவலர் சந்திரன் மரணம்: சவப் பரிசோதனை அறிக்கைக்காகப் ப... | Thisaigal News