சரவாக், ஜூன் 21-
சரவாக், பிந்துலு, கிடுரோங் இராணுவ முகாமைத் தளமாக கொண்டு 7 ஆவது பட்டாளத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வனப்பகுதியில் Op UKUR சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போது ப்ரீபெட் முஹம்மது சயாபிக் ஹில்மி என்ற அந்த இராணுவ வீரர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இராணுவ வீரரை தேடும் பணி முழு வீச்சில்
முடக்கி விடப்பட்டுள்ளதாக அரச மலேசிய இராணுவப் படை தெரிவித்துள்ளது.








