நாட்டில் வேலை தேடி வரும் இளையோர்களுக்கு ஒரு நிரந்தர வேலை கிடைக்கும் வரையில் அவர்கள் வேலை தேடும் காலகட்டத்தில் தங்கியிருப்பதற்கு பத்து வெள்ளி கட்டணத்தில் தங்கும் வசதியை கோலாலம்பூர் மாநகரில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
Y- Capsule என்ற அந்த தங்கும் வசதி திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் 18 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோர்கள் நாள் ஒன்றுக்கு சரசாரி 10 வெள்ளி கட்டணத்தில் தங்கியிருக்கலாம் என்று அமைச்சர் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.
இந்த வசதிகளை இளையோர்கள் வரும் நாளை மறுநாள் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் பெறலாம் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


