கோலாலம்பூர், மார்ச்.02-
அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு, நேற்று மார்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி 4.31 விழுக்காடு அதிகரித்து 3.89 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
ரிங்கிட்டின் இந்த வலுவான வளர்ச்சி, நாட்டின் வலுவான உள்நாட்டு அடித்தளத்தை பிரதிபலிக்கிறது. குறிப்பாக, 2025-ஆம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5.2 விழுக்காடாக பதிவாகியுள்ளது. இது ஆரம்பக் கால கணிப்புகளை விட அதிகமாகும்.
சேவை மற்றும் உற்பத்தித் துறைகளின் விரிவான வளர்ச்சி மற்றும் உள்நாட்டு தேவையே பொருளாதாரத்தின் முக்கிய உந்துசக்தியாக இது அமைந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்ற மேலவை கூட்டத்தில், மாமன்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான அமைச்சின் பதில் உரையின் போது அமீர் ஹம்ஸா இந்தத் தகவலை வெளியிட்டார்.








