ரோன்95 பெட்ரோல் மற்றும் டீசலுக்கான மாதாந்திர மானியக் Quota முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் ஆன் ஹாஃபிஸ் காசி வலியுறுத்தியுள்ளார். மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளாக எரிபொருள் விலையும் வாழ்க்கைச் செலவின உயர்வும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு வழங்கப்படும் 200 லிட்டர் பெட்ரோல் மானியம் போதுமானதாக இல்லை என்றும், வணிகங்களுக்கான டீசல் கட்டுப்பாட்டால் பொருட்களின் விலை உயர்ந்து பொதுமக்கள் இரட்டிப்பு பாதிப்பைச் சந்திக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தற்போது கச்சா எண்ணெய் விலை நிலைபெற்றுள்ளதால் இந்தக் கட்டுப்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், உலகளாவிய பெட்ரோலிய சந்தை இன்னும் முழுமையாக நிலைபெறவில்லை என்று நிதி அமைச்சகம் கடந்த வாரம் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.








