பினாங்கு மலை ரயில் பாதை அதன் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக வரும் ஜூன் 8 முதல் ஜூன் 14 வரை தற்காலிகமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 7 நாட்கள் பராமரிப்பின் போது பயணிகள் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். இந்த காலகட்டத்தில் மலை உச்சிக்குச் செல்ல விரும்புவோர் தாவரவியல் பூங்கா குவாரி பாதையில் இயங்கும் தனியார் ஜீப் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
. ஜூன் 15 அன்று ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல் தொடங்கும்.
தங்கள் பயணத்தைத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








