Dec 3, 2025
Thisaigal NewsYouTube
எம்40 தரப்பினரை அரசாங்கம் புறக்கணித்தது இல்லை
தற்போதைய செய்திகள்

எம்40 தரப்பினரை அரசாங்கம் புறக்கணித்தது இல்லை

Share:

எம்40 தரப்பினரின் நலன் சார்ந்த விவகாரங்களை அரசாங்கம் என்றுமே புறக்கணித்தது கிடையாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் பி40 தரப்பினக்கே அதிகமான சலுகைகளையும், அனுகூலங்களையும் வழங்குகிறது என்றும் எம்40 தரப்பினரை கண்டு கொள்வதில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையில்லை என்றும், அதில் அடிப்படையில்லை என்றும் பிரதமர் அன்வார் விளக்கம் அளித்துள்ளார்.

பி40 தரப்பினரின் நலன்களை காப்பது போலவே எம்40 தரப்பினரின் நலன்களை காப்பற்கும் அரசாங்கம் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News