நாட்டில் தற்போது அமலில் உள்ள 1,500 வெள்ளி குறைந்த பட்ச சம்பள முறை விகிதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கு மேல் உயர்த்துமாறு பக்காத்தான் ஹராப்பான் எம்.பி. ஒருவர், இன்று நாடாளுமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளார்.
மக்களின் வாழ்க்கை செலவினம் உயர்ந்து கொண்டு இருப்பதால் குறைந்த பட்ச சம்பள விகதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கும் மேல் உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும் என்ற ஈப்போ பாராட் எம்.பி. எம். குலசேகரன் வாதிட்டார்.
மக்களின் வாழ்க்கைச் செலவினம் உயர்ந்து கொண்டு இருப்பதால் நகர்ப்புறங்களில் வசிக்கும் அவர்களின் நடப்புத் தேவையை சமாளிக்க திருமணம் ஆகாத தனிநபரின் குறைந்த பட்ச சம்பள விகிதம் 2,700 வெள்ளியாகவும், திருமணமனமாகி குழந்தை இல்லாத தம்பதியருக்கு 4,500 வெள்ளியாகவும், இரண்டு குழந்தைகளை கொண்டுள்ள தம்பதியருக்கு 6,500 வெள்ளியாக உயர்த்தப்பட வேண்டும் என்று கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய பொருளகமான பேங்க் நெகாரா மலேசியா தமது ஆய்வில் பரிந்துரை செய்து இருப்பதையும் குலசேகரன் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய செய்திகள்
குறைந்த பட்ச சம்பள விகிதத்தை 2 ஆயிரம் வெள்ளிக்கு மேல் உயர்த்துவீர் -நாடாளுமன்றத்தில் பரிந்துரை
Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்


