பிணப்பெட்டி நிறுவனங்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு, முஸ்லிம் அல்லாதவர்களின் பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் கைது வேட்டையில் மேலும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்.
ஒவ்வொரு பிணத்திற்கும் 100 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக முழு வீச்சில் எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட கைது நடவடிக்கையில் பிணத்தை ஒப்படைப்பதில் 3,500 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.
இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டுள்ள அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளையும் ஐந்து நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய செய்திகள்
பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் மேலும் இரு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்
Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


