பிணப்பெட்டி நிறுவனங்களுடன் கைக்கோர்த்துக்கொண்டு, முஸ்லிம் அல்லாதவர்களின் பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் கைது வேட்டையில் மேலும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்.
ஒவ்வொரு பிணத்திற்கும் 100 வெள்ளி முதல் 600 வெள்ளி வரை லஞ்சம் பெற்று வருவதாக கூறப்படும் மருத்துவ அதிகாரிகளுக்கு எதிராக முழு வீச்சில் எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்ட கைது நடவடிக்கையில் பிணத்தை ஒப்படைப்பதில் 3,500 வெள்ளி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படும் இரண்டு மருத்துவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை சேர்ந்த மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.
இன்று சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றதில் நிறுத்தப்பட்டுள்ள அந்த இரண்டு மருத்துவ அதிகாரிகளையும் ஐந்து நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போதைய செய்திகள்
பிரேதங்களை விரைந்து ஒப்படைப்பதில் லஞ்சம் மேலும் இரு மருத்துவ அதிகாரிகள் பிடிபட்டனர்
Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


