Mar 24, 2026
Thisaigal NewsYouTube
கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்

Share:

பினாங்கு,ஜூலை 13-

பினாங்கு, பெராய்யில் உள்ள தொழிற்சாலையில் 12 மீட்டர் உயரத்திலான கூரையின் மேலிருந்து அந்நிய தொழிலாளர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் மணி 12:30-க்கு 29 வயதான அந்த ஒப்பந்த வேலைக்காரர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் கூரையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தார்.
சம்பவம் குறித்த அவசர அழைப்பை பெற்றதும் புலனாய்வு அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில வேலையிட பாதுகாப்பு – சுகாதார துறை இயக்குநர் அலுவலகம் தெரிவித்தது.அயலக தொழிலாளரின் மரணத்தை தொடர்ந்து விசாரணை முடியும் வரை தொழிற்சாலையின் அனைத்து பராமரிப்பு பணிகளையும் நிறுத்துமாறு அது உத்தரவிட்டது.
வேலையிட பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதிச் செய்வது ஒவ்வொரு தொழிற்சாலை அல்லது முதலாளியின் கடமை என்பதை JKKP மீண்டும் நினைவுறுத்தியது.

Related News