Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு பெண்களிடம் கொள்ளை, நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இரண்டு பெண்களிடம் கொள்ளை, நபர் மீது குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.11-

கடந்த வாரம் இரண்டு பெண்களை மடக்கிக் கொள்ளையிட்டதாக நபர் ஒருவர், ஜோகூர்பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

அப்துர் ராஸாக் சுப்பையா அப்துல்லா என்ற 36 வயதுடைய அந்த நபர், நீதிபதி தல்ஹா பாசோங் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 8.26 மணியளவில் கூலாய், பண்டார் புத்ரா, ஜாலான் ஶ்ரீ புத்ரா 1 இல் ஒரு கடையின் பின்புறம் 52 வயதுடைய இந்தோனேசிய மாதுவை மடக்கி அவரின் கைப்பை, கடப்பிதழ், தங்க ஆபரணங்கள், மணிபர்ஸ் உட்பட சில பொருட்களைக் கொள்ளையடித்ததாக சுப்பையா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் அதே தினத்தன்று காலை 8.45 மணியளவில் கூலாய், தாமான் இம்பியான் செனாய், ஜாலான் இம்பியான் செனாய் உத்தாமாவில் சலவைக்கடையில் 37 வயது மலேசிய மாதுவை மடக்கி, அவரின் கைப்பை, வங்கி அட்டைகள், 200 ரிங்கிட் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்ததாக அந்த நபர் மீது மற்றொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 14 ஆண்டு சிறை, அபராதம் மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 392 பிரிவின் கீழ் சுப்பையா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி