Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமருடன் பேச்சு
தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பிரதமருடன் பேச்சு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.07-

கடந்த வாரம் நிகழ்ந்த புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது தொடர்பில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் எந்ததெந்த வகையில் உதவ முடியும், அவர்களின் சிரமங்களை எவ்வாறு குறைக்க முடியும் என்பது குறித்து இச்சந்திப்பின் போது பிரதமருடன் அமைச்சு விவாதிக்கும் என்று ஙா கோர் மிங் விளக்கினார்.

காலை 11 மணியளவில் நடைபெறவிருக்கும் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அதன் முடிவு பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இன்று கோலாலம்பூரில் வாங்கத்தக்க விலையில் உள்ள வீடமைப்புத் திட்டங்கள் மீதான 14 ஆவது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி