Mar 24, 2026
Thisaigal NewsYouTube
26 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன
தற்போதைய செய்திகள்

26 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன

Share:

தஞ்சோங் மாலிம் , ஜூலை 17-

ஒரு போலீஸ்காரரான தனது காதலனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படும் தஞ்சோங் மாலிம், சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான 25 வயது நூர் ஃபர்ஹானா கார்த்தினி அப்துல்லா- வின் மரணம் தொடர்பில் போலீசார் 26 பேரிடம் விசாணை நடத்தியுள்ளனர்.

அந்த 26 பேரில் உயிரிழந்த நூர் ஃபர்ஹானா கார்த்தினி -யின் தோழிகளும் அடங்குவர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆராய்ந்ததில் இந்த கொலையில் ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சரவா, மீரியைச் சேர்ந்த அந்த முன்னாள் மாணவியின் உடல் கடந்த திங்கட்கிழமை உலு சிலாங்கூர், உலு பெர்ணம், கம்போங் ஸ்ரீ கிளெடாங் - கில் உள்ள ஒரு செம்பனைத் தோட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.

அவரின் கொலை தொடர்பில் சிலீம் ரீவர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த 26 வயது போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related News