Mar 21, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு வழக்கு : ஜசெக. எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம்  பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கு : ஜசெக. எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 2023 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த இரண்டு பிரச்சார நிகழ்வுகளில் தன்னை அவதூறாகப் பேசியதற்காக சிலாங்கூர், பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹான், கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஒரு நேர்மையற்ற மற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம் என்று குற்றஞ்சாட்டியது மூலம் தாம் தவறு இழைத்து விட்டதாக சிலாங்கூர் சுங்கை ரமால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாஃபி ங்கா, தனது மன்னிப்புக் கோரிக்கையை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தம்முடைய அறிக்கைகள் முற்றிலும் உண்மையற்றவை, ஆதாரமற்றவை மற்றும் தகுதியற்றவை என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக அந்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர் தமது மன்னிப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து