Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அவதூறு வழக்கு : ஜசெக. எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம்  பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு
தற்போதைய செய்திகள்

அவதூறு வழக்கு : ஜசெக. எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் பகிரங்க மன்னிப்பு

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.26-

கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் மற்றும் 2023 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரிக்காத்தான் நேஷனல் ஏற்பாடு செய்த இரண்டு பிரச்சார நிகழ்வுகளில் தன்னை அவதூறாகப் பேசியதற்காக சிலாங்கூர், பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜசெக. பாங்கி எம்.பி. ஷாரெட்ஸான் ஜொஹான், கம்யூனிச சித்தாந்தத்தை ஆதரிக்கும் ஒரு நேர்மையற்ற மற்றும் மதச் சார்பற்ற முஸ்லிம் என்று குற்றஞ்சாட்டியது மூலம் தாம் தவறு இழைத்து விட்டதாக சிலாங்கூர் சுங்கை ரமால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர் முகமட் ஷாஃபி ங்கா, தனது மன்னிப்புக் கோரிக்கையை முகநூலில் பதிவிட்டுள்ளார்.

தம்முடைய அறிக்கைகள் முற்றிலும் உண்மையற்றவை, ஆதாரமற்றவை மற்றும் தகுதியற்றவை என்பதைத் தாம் ஒப்புக் கொள்வதாக அந்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர் தமது மன்னிப்புக் கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்