Aug 22, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்ட மலேசியர் விடுவிப்பு

Share:

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது தடுத்து வைக்கப்பட்ட 32 வயது மலேசியர், விடுவிக்கப்பட்டு பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளார்.

அந்த நபருக்கும் பிடிப்பட்ட மோசடி கும்பலுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

அவரிடம் மலேசிய வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை, CCID சார்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, இணையவழி மோசடி கும்பலில் மலேசியர்கள் ஈடுபட்டிருப்பதாக வெளியான தகவல்களை விசாரிக்க சிறப்புக் குழு ஒன்று பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக போலீஸ் படைத் தலைவர் காலித் இஸ்மாயில் முன்னதாக தெரிவித்திருந்தார்.

இஸ்லாமாபாத் மோசடி அழைப்பு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 258 வெளிநாட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் வேறு எந்த மலேசியரும் இடம் பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News