இவ்வாண்டு நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், பாஸ் கட்சியானது மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 16 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பாஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 15 தொகுதிகள் தற்போது பாரிசான் நேஷனல் வசத்தில் உள்ளதாகவும் மலாக்கா பாஸ் தலைவர் ஜுல்கிப்லி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
பாண்டாய் குண்டோர், பாயா ரும்புட், கிளேபாங், தஞ்சோங் பிடாரா, ஆயர் லிமாவ், லிங்கி, தாபோ நானிங், ரெம்பியா மற்றும் டுரியான் துங்கல் உள்ளிட்ட மொத்தம் 16 தொகுதிகளில் பாஸ் போட்டியிடவுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், பாஸ் குறிவைத்துள்ள இந்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளை அம்னோ வென்றது.
அவற்றில் கிளேபாங் தொகுதியை மட்டும் மசீச கைப்பற்றியது.
அதேவேளையில், ரெம்பியா தொகுதியில் அம்னோ வென்றிருந்தாலும் கூட, அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜைலானி காமிஸ் பின்னர் கட்சி தாவல் தடுப்பு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, பாஸ் கட்சியில் இணைந்தார்.
பாஸ் கட்சியின் இம்முடிவானது, அண்மையில் மலாக்கா பாஸ் தேர்தல் இயந்திரத் தொடக்க நிகழ்வில் பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனுசி நோர் வெளியிட்ட அறிவிப்புடன் ஒத்துப்போவதாகவும் ஜுல்கிப்லி இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.








