Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் ங்கா கோர் மிங் எப்போதும் ஊடகச் சுதந்திரத்தை மதிக்கக்கூடியவர்: அமைச்சு விளக்கம்
தற்போதைய செய்திகள்

அமைச்சர் ங்கா கோர் மிங் எப்போதும் ஊடகச் சுதந்திரத்தை மதிக்கக்கூடியவர்: அமைச்சு விளக்கம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.31-

அமைச்சர் ங்கா கோர் மிங் தலைமையிலான வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு, ஊடகச் சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறது என்றும், மக்களுக்கு துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதில் ஊடகங்களின் முக்கிய பங்களிப்பைப் பாராட்டுகிறது என்றும் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தாருங்கள் அல்லது "I LITE U " நிகழ்வை முன்னிட்டு நகர்ப்புற நிலைத்தன்மை, விளக்குப் புத்தாக்கத் திட்டத்தைத் தொடங்குவதவதற்காக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பானது, கோலாலம்பூரில் உள்ள தனித்துவமிக்க சின்னங்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளைக் கவர வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதாகும் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு விளக்கம் அளித்தது.

மலாய் மொழியின் மாண்பை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக, கோலாலம்பூர் மேயரின் உரை உட்பட அமைச்சர் ங்கா கோர் மிங் ஆகியோரின் பேச்சு மலாய் மொழியில் நடத்தப்பட்டது.

அந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் உள்ளூர் செய்தியாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கப்பட்டது.

ஊடகவியலாளர்களின் கேள்விகளை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு மதிக்கிறது. அதே வேளையில் ஊடகவியலாளர்கள் கேட்கக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகிறது என்று அந்த அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை