லங்காவி மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான சிறப்பு நடவடிக்கையில், 14.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்பிரிவு இயக்குநர் டத்தோ உசேன் ஓமர் கான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி, ஐந்து நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, பல்வேறு இடங்களில் மொத்தம் 231 சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் 191 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து சுமார் 180 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மதிப்பு சுமார் 14.1 மில்லியன் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.








